இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கன்னட சின்னத்திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அனிருத் ஜட்கர். தற்போது ஆரூர் ஜெகதீஷ் இயக்கத்தில் ஜோதே ஜோதேயாலி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ஆரம்பதித்த நாளில் இருந்தே அனிருத்துக்கும், இயக்குனருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். சமீபத்தில் அனிருத் இயக்குனருடன் கோபித்துக் கொண்டு படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விட்டார். இதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது.
அனிருத் தனக்கு கேரவன் கேட்டு அடம்பிடித்தாக கூறப்படுகிறது. கன்னட சின்னத்திரையில் வெளிப்புற படப்பிடிப்பில் நடிகைகள் உடை மாற்றுவதற்கு மட்டுமே கேரவன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனிருத் கேரவன் கேட்டது பிரச்சினை ஆனது. இந்த விவகாரம் கன்னட சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றது. இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் அனிருத்துக்கு 2 ஆண்டுகள் தொடரில் நடிக்க தடை விதித்தது. இதனால் தற்போது நடித்து வரும் அனைத்து தொடர்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். கன்னட சின்னத்திரையில் ஒரு நடிகருக்கு தடை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்கள்.