ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாள சினிமாவில் நடிகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறியதுடன் அதை வெற்றி படமாகவும் ஆக்கினார். இதை தொடர்ந்து கிட்டத்தட்ட 40 வருடமாக நடிப்புலகிலேயே பயணித்து வந்த மோகன்லாலும் பாரோஸ் என்கிற படத்தை இயக்குவதாக அறிவித்தார். வழக்கமான கமர்சியல் ஆக்சன் பாதையில் செல்லாமல் குழந்தைகளை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார் மோகன்லால்.
போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பாரோஸ் என்கிற பாதுகவாலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடித்துள்ளார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். கடந்த வருடம் மார்ச் மாதம் துவங்கிய படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் நடைபெற்று தற்போது சென்னையில் நடைபெற்று வந்த அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த வருடமே இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறாராம். மோகன்லால்.