‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

பிருத்விராஜ், சம்யுக்தா மேனன் விவேக் ஓபராய் நடித்த கடுவா படம் கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு சாஜி கைலாஷ் இயக்கி இருந்தார். படத்தை லிஸ்டின் ஸ்டீபன் சுப்ரியா மேனன் ஆகியோர் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்று இருந்தது. இது குறித்து பலரும் புகார் அளித்த நிலையில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பாளர் லிஸ்பன் ஸ்டீபன் ஆகியோருக்கு கேரள மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து ஷாஜி கைலாஷூம், பிரித்விராஜூம் மன்னிப்பு கேட்டுள்ளனர். பிருத்விராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட விளக்கத்தில் "அந்த வசனம் வில்லனின் கொடூரத்தை ஆடியன்ஸுக்கு உணர்த்துவதற்காக வைக்கப்பட்டது. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. என்றாலும் அதனை தவறு என்று உணர்கிறோம். அதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்து தனது மன்னிப்பையும் இணைத்திருக்கிறார்.