கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் | ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்கும் வடசென்னை பையன்: 'அன்பே டயானா'வின் கதை | ராதிகாவை கிழவியாக மாற்றிய வினீஷ் | துபாயில் அஜித் பாதுகாப்பாக இருக்கிறார்: மேலாளர் தகவல் |

பிருத்விராஜ், சம்யுக்தா மேனன் விவேக் ஓபராய் நடித்த கடுவா படம் கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு சாஜி கைலாஷ் இயக்கி இருந்தார். படத்தை லிஸ்டின் ஸ்டீபன் சுப்ரியா மேனன் ஆகியோர் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்று இருந்தது. இது குறித்து பலரும் புகார் அளித்த நிலையில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பாளர் லிஸ்பன் ஸ்டீபன் ஆகியோருக்கு கேரள மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து ஷாஜி கைலாஷூம், பிரித்விராஜூம் மன்னிப்பு கேட்டுள்ளனர். பிருத்விராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட விளக்கத்தில் "அந்த வசனம் வில்லனின் கொடூரத்தை ஆடியன்ஸுக்கு உணர்த்துவதற்காக வைக்கப்பட்டது. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. என்றாலும் அதனை தவறு என்று உணர்கிறோம். அதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்து தனது மன்னிப்பையும் இணைத்திருக்கிறார்.




