பிளாஷ்பேக்: கலைஞர்கள் பேசாமல், பார்வையாளர்கள் பேசிய மவுனத் திரைப்படம் “பேசும்படம்” | 15 ஆண்டுகளுக்குபின் மங்கத்தா ரீ ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் போடும் திட்டம் | சென்சார் சான்றிதழ் வரலையா : டென்ஷனில் பராசக்தி, ஜனநாயகன் குழு | ஓமனில் டிரக்கிங் சென்ற பாடகி சித்ரா ஐயரின் சகோதரி உயிரிழப்பு | பாலா தயாரிப்பில் படம் இயக்கப் போகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? | இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது : இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தகவல் | இந்திய பாக்ஸ் ஆபீஸ் 2025 : எத்தனை கோடி வசூல் தெரியுமா ? | அதிக சதவீதம் கேட்கும் 'ஜனநாயகன்' ; தயங்கும் தியேட்டர் உரிமையாளர்கள் : பிரச்னை தீருமா? | 'பராசக்தி' படத்தில் அண்ணாதுரை... கருணாநிதியும் இருக்கிறாரா? | 2வது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற சிபி சக்கரவர்த்தி |

பிருத்விராஜ், சம்யுக்தா மேனன் விவேக் ஓபராய் நடித்த கடுவா படம் கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு சாஜி கைலாஷ் இயக்கி இருந்தார். படத்தை லிஸ்டின் ஸ்டீபன் சுப்ரியா மேனன் ஆகியோர் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்று இருந்தது. இது குறித்து பலரும் புகார் அளித்த நிலையில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பாளர் லிஸ்பன் ஸ்டீபன் ஆகியோருக்கு கேரள மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து ஷாஜி கைலாஷூம், பிரித்விராஜூம் மன்னிப்பு கேட்டுள்ளனர். பிருத்விராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட விளக்கத்தில் "அந்த வசனம் வில்லனின் கொடூரத்தை ஆடியன்ஸுக்கு உணர்த்துவதற்காக வைக்கப்பட்டது. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. என்றாலும் அதனை தவறு என்று உணர்கிறோம். அதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்து தனது மன்னிப்பையும் இணைத்திருக்கிறார்.




