ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிருத்விராஜ், சம்யுக்தா மேனன் விவேக் ஓபராய் நடித்த கடுவா படம் கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு சாஜி கைலாஷ் இயக்கி இருந்தார். படத்தை லிஸ்டின் ஸ்டீபன் சுப்ரியா மேனன் ஆகியோர் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்று இருந்தது. இது குறித்து பலரும் புகார் அளித்த நிலையில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பாளர் லிஸ்பன் ஸ்டீபன் ஆகியோருக்கு கேரள மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து ஷாஜி கைலாஷூம், பிரித்விராஜூம் மன்னிப்பு கேட்டுள்ளனர். பிருத்விராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட விளக்கத்தில் "அந்த வசனம் வில்லனின் கொடூரத்தை ஆடியன்ஸுக்கு உணர்த்துவதற்காக வைக்கப்பட்டது. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. என்றாலும் அதனை தவறு என்று உணர்கிறோம். அதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்து தனது மன்னிப்பையும் இணைத்திருக்கிறார்.