பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! |

தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படும். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த சம்பள உயர்வு திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது சினிமாக்கள் நல்ல வசூலை குவித்து வருவதால் தொழிலாளர் சங்கம் சம்பள உயர்வு கேட்டு வந்தது. அதற்கு தயாரிப்பாளர் சங்கம் பாராமுகமாக இருந்தது.
இதையடுத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 21ம் தேதி முதல் ஆந்திரா, தெலங்கானாவில் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. அங்கு நடந்து வந்த தமிழ் படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தினர், திரைப்பட தொழிலாளர் சங்கத்தினரை அழைத்து தெலுங்கானா அமைச்சர் சீனிவாஸ் யாதவ், பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. நேற்று முதல் தொழிலாளர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.




