நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பழம்பெரும் மலையாள நடிகர் காலித். பிரபல டைரக்டரான காலித் ரகுமான் மற்றும் ஒளிப்பதிவாளர்களான ஷைஜு காலித் மற்றும் ஜிம்ஷி காலித் ஆகியோரின் தந்தை. 74 வயதான காலித், காஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வந்தது.
நேற்று காலித் வழக்கம்போல படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். படப்பிடிப்பின் இடையே கழிப்பறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து சென்று பார்த்தபோது காலித் கழிப்பறைக்குள் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவர் மாரடைப்பில் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த காலித், நாடக நடிகராக இருந்து சினிமா நடிகர் ஆனவர். 1973ம் ஆண்டு பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தாப்பானா, அனுராக கரிக்கின் வெள்ளம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இவர் டிவி தொடரில் நடித்து வந்தார். காலித் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.