வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

பழம்பெரும் மலையாள நடிகர் காலித். பிரபல டைரக்டரான காலித் ரகுமான் மற்றும் ஒளிப்பதிவாளர்களான ஷைஜு காலித் மற்றும் ஜிம்ஷி காலித் ஆகியோரின் தந்தை. 74 வயதான காலித், காஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வந்தது.
நேற்று காலித் வழக்கம்போல படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். படப்பிடிப்பின் இடையே கழிப்பறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து சென்று பார்த்தபோது காலித் கழிப்பறைக்குள் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவர் மாரடைப்பில் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த காலித், நாடக நடிகராக இருந்து சினிமா நடிகர் ஆனவர். 1973ம் ஆண்டு பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தாப்பானா, அனுராக கரிக்கின் வெள்ளம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இவர் டிவி தொடரில் நடித்து வந்தார். காலித் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.




