'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பழம்பெரும் மலையாள நடிகர் காலித். பிரபல டைரக்டரான காலித் ரகுமான் மற்றும் ஒளிப்பதிவாளர்களான ஷைஜு காலித் மற்றும் ஜிம்ஷி காலித் ஆகியோரின் தந்தை. 74 வயதான காலித், காஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வந்தது.
நேற்று காலித் வழக்கம்போல படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். படப்பிடிப்பின் இடையே கழிப்பறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து சென்று பார்த்தபோது காலித் கழிப்பறைக்குள் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவர் மாரடைப்பில் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த காலித், நாடக நடிகராக இருந்து சினிமா நடிகர் ஆனவர். 1973ம் ஆண்டு பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தாப்பானா, அனுராக கரிக்கின் வெள்ளம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இவர் டிவி தொடரில் நடித்து வந்தார். காலித் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.