இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள திரையுலகில் நடிகர் பிரிதிவிராஜ் பிசியான நடிகராக நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் துவங்கப்பட்ட ஆடுஜீவிதம் திரைப்படம் பல கட்ட படப்பிடிப்புகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொரோனா முதல் அலை பரவ ஆரம்பித்த சமயத்தில் ஜோர்டான் நாட்டில் உள்ள வாடி ரம்மில் உள்ள பாலைவனப்பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது லாக்டவுன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேல் அங்கேயே பிரித்விராஜ் மற்றும் படக்குழுவினர் முடங்கிக் கிடக்க நேரிட்டது.
இந்த படத்தில் கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்று பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் நஜீப் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரித்விராஜ். இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பை அதே வாடி ரம் பகுதியில் தற்போது நடத்தி வருகின்றனர் ஆடுஜீவிதம் படக்குழுவினர். இதற்காக கடந்த மாதமே பிரித்விராஜ் கேரளாவில் இருந்து கிளம்பி சென்றுவிட்டார்.
இந்த நிலையில் அவரது மகள் அலங்கரிதா தந்தையை பார்க்க வேண்டும் அடம் பிடித்ததால் மகளை அழைத்துக்கொண்டு கணவரை பார்ப்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் பாலைவனத்திற்கே கிளம்பி வந்துவிட்டார் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன். மனைவி குழந்தையின் வருகையால் படப்பிடிப்பிற்கு அவ்வப்போது கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு குடும்பத்துடன் ரிலாக்ஸாக ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பி விடுகிறாராம் பிரித்விராஜ்.