14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
கடந்த மாதம் 14ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப். தற்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. 1200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோ யஷ் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையிலும், புகைப்பிடித்தல் ஆரோக்கியமான சமூக பழக்கம் என்றும், புகைப்பிடித்தல் ஒரு ஸ்டைல் என்பது போலவும், நடித்துள்ளார். எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று கர்நாட மாநில உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் படத்தை தடை செய்ய முடியாது என்று கூறி மனுவை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்தது.