சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் வீட்டில் இருந்து யானை தந்தங்கள் மீட்கப்பட்டது. வனத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் யானை தந்தங்கள் வைத்திருப்பது இந்திய வனபாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இதனால் கேரள மாநில வனத்துறை மோகன்லால் மீது பெரும்பாபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் கேரள அரசு மோகன்லால் உரிய அனுமதி முன்பே பெற்றுள்ளார் என்று கூறி அவர் மீதான வழக்கை வாபஸ் பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதை எதிர்த்து பவுலோஸ் மற்றும் ஜேம்ஸ் மேத்யூ என்ற இரு சமூக ஆர்வலர்கள் முதலில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து. இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு. பவுலோஸ் மற்றும் ஜேம்ஸ் மேத்யூவின் வாதங்களை கேட்ட பின்னர்தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும். என்று பெரும்பாவூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதோடு இந்த விசாரணையை 3 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்தது. இதனால் இந்த யானை தந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.