டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் தெலுங்கில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக்காகி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. பவன் கல்யாண், ராணா நடித்திருந்த இந்தப்படம் ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மலையாளத்தில் இரண்டு ஹீரோக்களின் கதாபாத்திர பெயர்களுமே டைட்டிலில் இடம்பெற்றிருந்தாலும் தெலுங்கில் பவன் கல்யாணின் கதாபாத்திர பெயர் மட்டுமே டைட்டிலாக இடம் பிடித்தது. அதேசமயம் ராணாவின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் அவர் நடித்துள்ள டேனியல் சேகர் என்கிற கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதோடு தனக்கு முழு திருப்தி அளித்துள்ளதாக கூறியுள்ளார் ராணா.
இந்த படத்தின் ஒரிஜினலான அய்யப்பனும் கோஷியும் படத்தை தான் பார்த்திருந்தாலும் கூட அதில் நடித்த பிரித்விராஜின் நடிப்பின் சாயல் கொஞ்சம் கூட தெரியாமல் நடித்துள்ளதாக கூறியுள்ள ராணா அதற்கு பதிலாக அயன்மேன் ஆக நடித்த ராபர்ட் டவுனி ஜூனியரின் நடிப்பை கொஞ்சம் உள்வாங்கி அதை டேனியல் சேகர் கதாபாத்திரத்தில் பிரதிபலித்ததாக கூறியுள்ளார்.
மேலும் பீம்லா நாயக் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா என நிருபர்கள் கேட்டதற்கு பீம்லா நாயக்கிற்கும் டேனியல் சேகருக்குமான பிரச்சனை தான் கடைசியில் சுமூகமாக முடிந்துவிட்டதே.. அப்புறம் எதற்கு இரண்டாம் பாகம் என்று பதில் கேள்வி எழுப்பி இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு இல்லை என சூசகமாக கூறியுள்ளார்.