இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

மகேஷ் பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் படம் 'வாரணாசி'. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து ராஜமவுலி அளித்துள்ள ஒரு பேட்டியில், வாரணாசி படத்தில் புராணக் கூறுகள் அதிகமாக இடம்பெறுவதாக தெரிவித்திருக்கிறார்.
அதனால் இந்த வாரணாசி படம் புராண காலத்தின் பயண கருத்துக்கள் மற்றும் தெய்வீகம் ஆகியவை கலந்த கலவையாக உருவாக்கப்படுகிறது. சுமார் 25 நிமிடங்கள் புராண பகுதிகள் முழுமையாக இடம்பெறும். இந்த படத்தின் முதல் பார்வை எப்படி ரசிகர்களை ஈர்த்ததோ அதேபோன்று மொத்த படமும் ரசிகர்களை ஈர்த்துக் கொள்ளும் என்று தெரிவித்திருக்கிறார் ராஜமவுலி. மேலும், இந்த படத்தில் மகேஷ்பாபு, ருத்ரா என்ற வேடத்திலும், பிரியங்கா சோப்ரா மந்தாகினியாகவும், பிருத்விராஜ் சுகுமாரன் கும்பா என்ற வில்லன் வேடத்திலும் நடிக்கிறார்கள்.




