சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | ‛96' இரண்டாம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதனா : பிரேம் குமார் மறுப்பு | ‛லப்பர் பந்து' ரீமேக்கில் ஷாருக்கானா : சுவாசிகா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷ் உடன் மோதும் அதர்வா? | சிம்பு எடுத்த முடிவு | ரவி மோகன் இயக்கத்தில் நடிப்பது எப்போது : யோகி பாபு பதில் | 100வது நாளில் 'டிராகன்' | நித்திலன் சுவாமிநாதனை அழைத்து பாராட்டிய ஹாலிவுட் பிரபலம் | ஹாலிவுட் படத்தில் நடிக்கும் திஷா பதானி | பிரதமர் அணிவித்த சால்வை : இளம் பாடகி ஸ்ரீநிதா நெகிழ்ச்சி |
இந்தியாவிலேயே ஓடிடியில் அதிக படங்கள் வெளிவருவது கேரளாவில் தான். வாரத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. ஓடிடி வெளியீட்டுக்கென்றே படங்களும் தயாராகிறது. மலையாளிகள் உலகம் முழுக்க இருப்பதால் ஓடிடி வியாபாரம் கேரளாவில் அதிகமாக இருக்கிறது.
சிறிய படம் என்று இல்லாமல் பெரிய படங்களும் ஓடிடியில் வெளிவதற்கு கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 மற்றும் சமீபத்தில் வெளியான புரோ டாடி படங்கள் ஓடிடியில் வெளியானதால் தியேட்டர்கள் வருமானத்தை இழந்தன. காரணம் மோகன்லால் படங்களுக்கு என்று ஒரு மினிமம் வசூல் இருக்கிறது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சங்கமும் மோதிக் கொண்டிருந்தன. இறுதியில் தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்படும்போது பெரிய படங்கள் முதலில் தியேட்டரிலும் பிறகு ஓடிடி தளத்திலும் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் மோகன்லால் நடித்து முடித்துள்ள ஆராட்டு படம் வருகிற 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.