ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
இந்தியாவிலேயே ஓடிடியில் அதிக படங்கள் வெளிவருவது கேரளாவில் தான். வாரத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. ஓடிடி வெளியீட்டுக்கென்றே படங்களும் தயாராகிறது. மலையாளிகள் உலகம் முழுக்க இருப்பதால் ஓடிடி வியாபாரம் கேரளாவில் அதிகமாக இருக்கிறது.
சிறிய படம் என்று இல்லாமல் பெரிய படங்களும் ஓடிடியில் வெளிவதற்கு கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 மற்றும் சமீபத்தில் வெளியான புரோ டாடி படங்கள் ஓடிடியில் வெளியானதால் தியேட்டர்கள் வருமானத்தை இழந்தன. காரணம் மோகன்லால் படங்களுக்கு என்று ஒரு மினிமம் வசூல் இருக்கிறது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சங்கமும் மோதிக் கொண்டிருந்தன. இறுதியில் தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்படும்போது பெரிய படங்கள் முதலில் தியேட்டரிலும் பிறகு ஓடிடி தளத்திலும் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் மோகன்லால் நடித்து முடித்துள்ள ஆராட்டு படம் வருகிற 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.