
ஏப்-29 க்கு தள்ளிப்போன ஆச்சார்யா ரிலீஸ்
கடைசியாக இந்த படம் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கோவிட் பரவல் மற்றும் 50 சதவீத மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி என்கிற நிபந்தனை காரணமாக பிப்ரவரி 4ல் இந்த படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ஏப்ரல் 29ஆம் தேதி இந்தப்படம் வெளியாகும் என மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன்னதாக கிட்டத்தட்ட இதே தேதியில் ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த படம் ஒரு மாதம் முன்னதாக மார்ச் 25ம் தேதியே வெளியாக இருப்பதால் ஏப்ரல் 29 ஆம் தேதியை ஆச்சார்யா படத்தின் ரிலீஸுக்காக கையில் எடுத்துக் கொண்டார் ராம்சரண். அந்தவகையில் அவரது இரண்டு படங்கள் ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!