ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள நடிகர் திலீப், நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக, கடந்த சில் வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.. பின்னர் மூன்றுமாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு அப்படியே அமுங்கி கிடக்கும் நிலையில், இதே கடத்தல் விவாகரம் தொடர்பாக திலீப்பின் நண்பர் ஒருவர் அவருக்கு எதிராக அளித்த புகாரின் படி, புதிய வழக்கு ஒன்று திலீப் மீது பதியப்பட்டது. இது கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு மிகப்பெரிய குடைச்சலை கொடுத்து வருகிறது.
இந்த புதிய வழக்கில் முன்ஜாமீன் கேட்டு திலீப் விண்ணப்பித்திருந்தாலும், இப்போதுவரை அவருக்கு அது கிடைக்கவில்லை. சமீபத்தில் மூன்று நாட்கள் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜரானார் திலீப். அதுகுறித்த விசாரணை அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் திலீப் வசம் உள்ள அவரது மொபைல் போன்களை நீதிமன்றத்தில் இன்று (திங்கள்) ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது. திலீப் கூடுதலாக ஒருநாள் அவகாசம் கேட்டும் நீதிமன்றம் சம்மதிக்கவில்லை. இதையடுத்து திலீப்பின் 3 மொபைல்கள், அவரது சகோதரர் (2) மற்றும் அவரது மைத்துனர் (1) ஆகியோருடையதையும் சேர்த்து மொத்தம் ஆறு மொபைல் போன்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார் திலீப்.