சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

பிரபல நடிகை கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, 84 நாள் சிறைக்கு பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கடத்தல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி பைஜு புவலோசை கொலை செய்ய திலீப் முயற்சித்த தகவல்கள் சமீபத்தில் வெளியானது. இதை தொடர்ந்து திலீப் மற்றும் அவரது உறவினர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஜாமினில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திலீபின் வழக்கறிஞர் கொரோனா காலம் என்பதால் இந்த வழக்கில் திலீபை கைது செய்யக்கூடாது. வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். வழக்கு விசாரணையை வருகிற 14ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிமன்றம் அதுவரை திலீபை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டதோடு, முன்ஜாமின் குறித்த போலீசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவும் உத்தரவிட்டது.