எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ஜோக்கர் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவன ஈர்ப்பு செய்த குரு சோமசுந்தரம், இங்கு மட்டுமல்ல மலையாள திரையுலக படைப்பாளிகளையும் ரொம்பவே கவர்ந்து விட்டார். அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் டொவினோ தாமசுடன் இணைந்து இவர் நடித்த மின்னல் முரளி படம் வெற்றி பெற்றுள்ளதுடன் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் பெற்று தந்துள்ளது.
இந்த படத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பை பார்த்துவிட்டு மோகன்லால் தான் இயக்க உள்ள பாரோஸ் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவரை அழைத்துள்ளார். இந்த நிலையில் மின்னல் முரளிக்கு கிடைத்த வரவேற்பால் ஏற்கனவே குரு சோமசுந்தரம் மலையாளத்தில் நடித்து வந்த சட்டம்பி என்கிற படமும் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷிக்கு நண்பனாக முனியாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குரு சோமசுந்தரம். இந்தப் படத்தை அபிலாஷ் எஸ் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.