விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
தற்போது அய்யப்பனும் கோஷியும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக்கில் நடித்து முடித்துவிட்ட நடிகர் பவன் கல்யாண், அதை தொடர்ந்து தான் ஏற்கனவே நடித்துவந்த ஹரிஹர வீர மல்லு என்கிற படத்தின் வேலைகளை மீண்டும் கவனிக்க ஆரம்பித்துவிட்டார். நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தை கிரிஷ் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சுமார் 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் நிலைமை சரியான பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
அந்தவகையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் மீண்டும் துவங்கப்பட உள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்ய சொன்ன பவன் கல்யாண் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பாக ஒருமுறை ஸ்கிரிப்ட் முழுவதையும் படித்து பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் இயக்குனர் க்ரிஷ்.