12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' | ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார் | கேஜிஎப் படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மோகன்லால் மீதான யானை தந்தம் வழக்கு: 3 வாரத்தில் விசாரணையை முடிக்க கோர்ட் உத்தரவு | ஆட்டோவில் சென்ற நடிகையிடம் அத்துமீறிய போலீஸ் | ராம் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் | சேகர் படத்தின் தடை நீக்கம் ; மறு ரிலீஸ் தேதி பரிசீலனை |
தற்போது அய்யப்பனும் கோஷியும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக்கில் நடித்து முடித்துவிட்ட நடிகர் பவன் கல்யாண், அதை தொடர்ந்து தான் ஏற்கனவே நடித்துவந்த ஹரிஹர வீர மல்லு என்கிற படத்தின் வேலைகளை மீண்டும் கவனிக்க ஆரம்பித்துவிட்டார். நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தை கிரிஷ் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சுமார் 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் நிலைமை சரியான பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
அந்தவகையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் மீண்டும் துவங்கப்பட உள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்ய சொன்ன பவன் கல்யாண் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பாக ஒருமுறை ஸ்கிரிப்ட் முழுவதையும் படித்து பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் இயக்குனர் க்ரிஷ்.