எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழிபள்ளம் என்ற கிராமத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் ஆகியோருக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை புறம்போக்கு நிலம் என்று கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவினை எதிர்த்து மம்முட்டியும் அவரது குடும்பத்தினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் . அந்த மனுவில், கடந்த 2007ம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை கழுவேலி புறம்போக்கு வகைப்படுத்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த நிலம் சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மம்முட்டி தரப்பில், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலும் நிலத்தை மறு வகைப்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது. அதை ஏற்று நீதிபதி அந்த நிலத்தை கழுவெலி புறம்போக்கு நிலமாக மறு வகைப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதோடு இந்த நிலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தை மீண்டும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க பணி ஆணை பிறப்பித்தார்.