ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழிபள்ளம் என்ற கிராமத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் ஆகியோருக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை புறம்போக்கு நிலம் என்று கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவினை எதிர்த்து மம்முட்டியும் அவரது குடும்பத்தினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் . அந்த மனுவில், கடந்த 2007ம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை கழுவேலி புறம்போக்கு வகைப்படுத்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த நிலம் சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மம்முட்டி தரப்பில், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலும் நிலத்தை மறு வகைப்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது. அதை ஏற்று நீதிபதி அந்த நிலத்தை கழுவெலி புறம்போக்கு நிலமாக மறு வகைப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதோடு இந்த நிலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தை மீண்டும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க பணி ஆணை பிறப்பித்தார்.




