எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், சுகாசினி உள்பட பலர் நடித்துள்ள படம் மரக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகி யுள்ள இப்படம் டிசம்பர் 2-ந்தேதியான நாளை தியேட்டரில் வெளியாகிறது. தமிழில் இப் படத்தை அரபிக்கடலின் சிங்கம் என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிடுகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய மோகன்லால், இந்த அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை தயாரித்து முடிப்பது தயாரிப்பா ளருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதோடு இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனபோதிலும் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஒப்பந்தம் போட்டிருப்பதாக ஊடகங்களில் தவறான செய்தி பரவியது. அப்படி ஒப்பந்தமாகி யிருந்தால் இப்போது படத்தை தியேட்டரில் வெளியிட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இருப்பினும், தியேட்டர்களில் ஓடி முடித்ததும் அரபிக்கடலின்டே சிம் ஹம் படமும் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார் மோகன்லால்.