'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், சுகாசினி உள்பட பலர் நடித்துள்ள படம் மரக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகி யுள்ள இப்படம் டிசம்பர் 2-ந்தேதியான நாளை தியேட்டரில் வெளியாகிறது. தமிழில் இப் படத்தை அரபிக்கடலின் சிங்கம் என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிடுகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய மோகன்லால், இந்த அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை தயாரித்து முடிப்பது தயாரிப்பா ளருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதோடு இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனபோதிலும் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஒப்பந்தம் போட்டிருப்பதாக ஊடகங்களில் தவறான செய்தி பரவியது. அப்படி ஒப்பந்தமாகி யிருந்தால் இப்போது படத்தை தியேட்டரில் வெளியிட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இருப்பினும், தியேட்டர்களில் ஓடி முடித்ததும் அரபிக்கடலின்டே சிம் ஹம் படமும் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார் மோகன்லால்.