கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! |
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், சுகாசினி உள்பட பலர் நடித்துள்ள படம் மரக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகி யுள்ள இப்படம் டிசம்பர் 2-ந்தேதியான நாளை தியேட்டரில் வெளியாகிறது. தமிழில் இப் படத்தை அரபிக்கடலின் சிங்கம் என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிடுகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய மோகன்லால், இந்த அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை தயாரித்து முடிப்பது தயாரிப்பா ளருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதோடு இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனபோதிலும் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஒப்பந்தம் போட்டிருப்பதாக ஊடகங்களில் தவறான செய்தி பரவியது. அப்படி ஒப்பந்தமாகி யிருந்தால் இப்போது படத்தை தியேட்டரில் வெளியிட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இருப்பினும், தியேட்டர்களில் ஓடி முடித்ததும் அரபிக்கடலின்டே சிம் ஹம் படமும் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார் மோகன்லால்.