ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், சுகாசினி உள்பட பலர் நடித்துள்ள படம் மரக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகி யுள்ள இப்படம் டிசம்பர் 2-ந்தேதியான நாளை தியேட்டரில் வெளியாகிறது. தமிழில் இப் படத்தை அரபிக்கடலின் சிங்கம் என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிடுகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய மோகன்லால், இந்த அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை தயாரித்து முடிப்பது தயாரிப்பா ளருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதோடு இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனபோதிலும் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஒப்பந்தம் போட்டிருப்பதாக ஊடகங்களில் தவறான செய்தி பரவியது. அப்படி ஒப்பந்தமாகி யிருந்தால் இப்போது படத்தை தியேட்டரில் வெளியிட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இருப்பினும், தியேட்டர்களில் ஓடி முடித்ததும் அரபிக்கடலின்டே சிம் ஹம் படமும் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார் மோகன்லால்.