விமர்சனம்
-----------------------------------------
கல்கி சினிமா விமர்சனம்
* வறட்டு கிராமத்தில் முகிழ்க்கும் முரட்டுக் காதல் - நந்தி.
* காதலுக்குப் பாலமாவது பசுமாடு - வம்சம் படத்தின் சாயலில்!
* காதலுக்கு எதிரி பெற்றோர் இல்லை; உறவினர் இல்லை! வேலை வெட்டி இல்லா கிராமத்து இளைஞன் என்பது மட்டும் புதுசு!
* ஹீரோ அகில், ஹீரோயின் சனுஷா... காதல் காட்சிகளில் நடிப்பில் ஒளிர்வதும், மற்றநேரங்களில் ஃப்யூஸ் ஆவதும் எதிர்பாராதது அல்ல!
* "ரேணிகுண்டாவில் இருந்த சனுஷாவின் அழகு, "நந்தியில் கொஞ்சம் குந்தி(குறைந்து) போயிருப்பது மேக்-அப் மேனின் கைங்கர்யமோ?
* சிங்கப்பூர் ரிட்டனர் சிங்கம் புலி, - அகிலின் அப்பா கே.ஜி. இருவரும் காமெடியில் கொடியேற்றிக் கலக்குகின்றனர். "அவர்களே ஒரு கலரு, அவங்களுக்கு ஏன் கலர் (கூல்டிரிங்க்) என்பது போன்ற அலட்டல் வசனங்களில் தியேட்டர் குலுங்குகிறது.
* "வில்லன் குணசிங்கம் நிதிஷ் போல உதார் விட்டு உதைவாங்கும் கேரக்டர்களில் கிராமத்துக் கச்சிதம்!
* "என் பொறுமையை சோதிக்காதே என்று காட்சிக்குக் காட்சி பேசி, அகில் நம் பொறுமையை சோதிப்பதேன்?
* ஓப்பனிங் சாங் "சங்கு சக்கர சாமி வந்து சிங்குசிங்குன்னு ஆடுச்சாம்- குத்துப்பாட்டு நமக்கும் இசையமைப்பாளர் பரத்வாஜுக்கும் புதுசு. "கண்ணுக்குள் தீப்பிடிச்ச மெலடி பாட்டில் மனம் தள்ளாடுவது உண்மை!
* ரத்தீஷின் ஒளிப்பதிவில் கேரக்டர் டல் அடிப்பதும் பின்புலம் ஒளிர்வதும் ஏனோ?
* காதலைத் தவிர வேறெதுவும் அந்தக் கிராமத்தில் கிடைக்கலையா தமிழ்வாணன்(இயக்குனர்)ஸார்?
* இடுக்கு - முடுக்கில், குறுக்கு நெடுக்குமென ஓடும் திரைக்கதையை இழுத்து வந்து ஆன்டி-க்ளைமாக்ஸில் தைத்திருப்பது அனுதாபம் பெறத்தான் என்பது துருத்திக்கொண்டு தெரிகிறது.
* ஆமா, படத்துக்க பெயர் எதற்கு "நந்தி
நந்தி -சற்று நகர்ந்து கொடுத்திருக்கலாம்!






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!