Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கிரிஷ்னாஸ்டமி (தெலுங்கு)

கிரிஷ்னாஸ்டமி (தெலுங்கு),Krishnashtami
  • கிரிஷ்னாஸ்டமி (தெலுங்கு)
  • சுனில் (தெலுங்கு)
  • நிக்கி கல்ராணி
  • இயக்குனர்: வாசு வர்மா
20 பிப், 2016 - 15:01 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கிரிஷ்னாஸ்டமி (தெலுங்கு)

டோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து தற்போது ஹீரோவாக மாறியிருக்கும் சுனில், இம்முறை ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கிரிஷ்னாஸ்டமி.


வெளிநாட்டு வாழ் இந்தியரான நாயகன் சுனிலுக்கு இந்தியாவிற்கு வருவதில் அதீத ஆர்வம் விருப்பமும் கூட, அவர் ஒவ்வொரு முறை இந்தியா வருவதற்காக திட்டமிடும் போதும் ஏதாவது ஒன்று தவறாக நடந்து விடுகிறது. இதனால் அவரது குடும்பத்தார் அவரை இந்தியா செல்ல அனுமதிப்பதில்லை.பொருத்து பார்த்த சுனில், ஒருமுறை தன் குடும்பத்தாரின் அனுமதிக்காக காத்திராமல் கிளம்பி இந்தியா வந்துவிடுகிறார். இந்தியாவில் கால் பத்தித்தவுடன் ஒரு கும்பலால் தாக்கப்படுகிறார். இது மட்டும் போதாது என்று ஒரு குழப்பமான சூழ்நிலையில் ஒரு ராயல்சீமா குடும்பத்தில் சேர்கிறார்.


அங்கே சென்றதும் மீண்டும் தாக்கப்படுகிறார். ஆனால் உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லாமல் போகிறது. இப்படி காட்சிகள் செல்ல. பயம் கொண்ட இந்த குடும்பத்திற்கும் சுனிலுக்கும் என்ன சம்பந்தம்? பிரச்சனையை சுனில் எப்படி சமாளித்தார்? ஹீரோயின்களின் கதாபாத்திரம் எந்த இடங்களில் வருகிறது என்பதை அறிய நிச்சயம் திரை அரங்கிற்கு சென்றாக வேண்டும்.


சுனில் எப்போதும் போல் திரையில் தனது கவனம் பெறுகிறார், குறிப்பாக நடனத்தில். நிக்கி கல்ராணிக்கு டோலிவுட்டில் முதல் படமே அருமையாக அமைந்துள்ளது. இனி வரும் காலங்களில் அநேக தெலுங்கு படங்களில் அவரை எதிர் பார்க்கலாம். முதல் பாதியில் அநேக காட்சிகள் ரசிக்கும் படி இருக்கின்றான குறிப்பாக இடைவேளைக்கு சற்றே முந்தைய காட்சிகள்.


படத்தின் எதிர்பாராத நேரத்தில் அவிழும் முடிச்சுகள் காட்சிகளோடு ரசிகர்களை ஒன்றவைத்து ரசிக்க வைக்கிறது. பலவீனம் என்று பார்த்தால் சுனிலின் கதாபாத்திர வடிவமைப்பு. சுனிலை நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே பார்த்த ரசிகர்களுக்கு ஆக்ஷன் ஹீரோவாக அவரை ஏற்றுகொள்வதில் தயக்கம் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை.


மேலும் இடைவேளைக்கு பிறகு படத்தின் திரைக்கதை இலக்கற்று சுற்றி திரிகிறது.. இதுபோக பாடல்கள் பொருந்தாத இடத்தில் வந்து நம் பொருமையை ரொம்பவே சோதிக்கிறது.படத்தின் ஒளிப்பதிவை நிச்சயம் குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும், மேலும் வசனங்களும் நன்றாகவே எழுதப்படிருக்கிறது. கருணையில்லாமல் மூன்று பாடல்களுக்கு கத்தரி போட்டிருந்தால் படம் இன்னும் வேகம் எடுத்திருக்கும்.


வழக்கம் போல் சுனிலின் நகைச்சுவை காட்சிகளை எதிர்பார்த்து இருந்தால் அது இந்த படத்தில் இருக்காது. இப்படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் தான் பெரும் பலம். எதையும் எதிர்பார்க்காமல் வந்தால் ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்.


கிரிஷ்னாஸ்டமி - ஓகே ரகம்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in