முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
தமிழில் மிருகம், ஈரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆதி. இவரும் டார்லிங் உள்ளிட்ட பல படங்கள் நடித்த நிக்கி கல்ராணியும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அப்போது கோயில் வளாகத்துக்குள் வந்த அவர்களை கண்டதும் அங்கு கூடிய பக்தர்கள் அடையாளம் கண்டு கொண்டு அவர்களுடன் போட்டிப்போட்டு செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்கள்.
அதையடுத்து அங்கு நின்ற காவலர்கள் ஆதி - நிக்கி கல்ராணி ஆகிய இருவரையும் பாதுகாப்புடன் கோயிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்திருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.