'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
படம் : குடைக்குள் மழை
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : பார்த்திபன், மதுமிதா
இயக்கம் : பார்த்திபன்
தயாரிப்பு : பயாஸ்கோப் பிலிம் பிரேம்ஸ்
'மல்டிபிள் பர்சனாலிட்டி' எனும், நமக்குள் இருக்கும் அன்னியனை அறிமுகப்படுத்திய படம், குடைக்குள் மழை. இப்படத்தில் இருந்து, ஒரு பகுதி ஆடை, மறுபகுதி அந்நியன் என பரிணாமம் எடுத்தது எனலாம்.
மறைவாய் கேமராவை வைத்து, பொதுமக்களிடம் நிஜம் போலவே ஒரு நிகழ்ச்சியை நடத்தி, இறுதியில் எல்லாம் சும்மா தான் என்ற, 'ப்ராங்க் ஷோ' காரணமாக, ஒருவனுக்குள் நிகழும் மன விரிசல் தான், இப்படத்தின் கதைக்களம். அந்த மன விரிசல், இன்னொரு நபரை உருவாக்கி, அதை கொன்று, நமக்குள் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்வார், இயக்குனர் பார்த்திபன்.
'என்ன... படம் ஒரு மாதிரிப் போகுதே...' என, சோம்பல் முறிக்கும்போது தான், யாரும் எதிர்பார்க்காத, 'கிளைமாக்ஸ்' வரும். படத்தின் இறுதி காட்சி, ஒட்டுமொத்த படத்தையும் திரும்ப நினைவுகூரச் செய்யும். 'ஓ... இதுக்காகத் தான், அந்த காட்சி வந்ததா...' என, ரசிகர்களை சிலர்க்க வைத்திருப்பார், பார்த்திபன்.
உடைந்த பல்ப் துண்டில் நிலா தெரிய செய்வது போல, பல இடங்களில், இயக்குனரின், 'டச்' ரசிக்கச் செய்தது.படத்தின் கலை இயக்குனர் விஜய் முருகன், ஆச்சரியப்பட செய்தார். மேற்கூரையில் நகர்கிற பிரமாண்ட கண்ணாடி கடிகாரம், அவரின் கலைக்கு ஓர் உதாரணம்.
பார்த்திபன் துாக்கு மாட்டிக் கொள்ள, ஒரு பட்டுச் சேலையை எடுக்க, அது கதாநாயகியாக மாறி, அவரைப் படாதபாடு படுத்தும் காட்சியில், சஞ்சயின் கேமராவும், கார்த்திக் ராஜாவின் இசையும், 'மேஜிக்' நிகழ்த்தியிருக்கும். தரமான படம் தான்; ரசிகர்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் காலதாமதம் ஆனது. அதுவே, இப்படத்தின் வசூல் ரீதியான தோல்விக்கு காரணமாக அமைந்தது.
பார்த்திபன் விழும்போதெல்லாம் விதை!