அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து 'பா', 'சீனிகம்' ஷமிதாப் என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் தான் இயக்குனர் பால்கி. இந்தநிலையில் கார்வான், தி சோயா பேக்டர் என ஏற்கனவே இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மான் தற்போது இயக்குனர் பால்கியின் டைரக்சனில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியது. இந்தநிலையில் இந்தப்படத்திற்கு 'சுப்' என டைட்டில் வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ரிவெஞ்ச் ஆப் தி ஆர்டிஸ்ட்' என டேக்லைனுடன் வெளியாகியுள்ள படத்தின் டைட்டில் போஸ்டர் இதுவரை பால்கி இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இருக்கை நுனியில் அமரவைக்கும் த்ரில்லர் படமாக இருக்கும் என சொல்லாமல் சொல்கிறது.