'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
பாலிவுட் நடிகையான பிரக்யா ஜெய்ஸ்வால், தற்போது தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக அகந்தா படத்திலும் இந்தியில் சல்மான் கானுடன் அந்திம் படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் விரட்டு என்ற படத்தில் நடித்திருந்தார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரக்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்பு அது குணமானது. தற்போது தனக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஏற்கெனவே எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் அது குணமானதும் இரண்டு தடுப்பூசியும் உரிய இடைவெளியில் போட்டுக் கொண்டேன். ஆனாலும் இப்போது எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்படுகிறது. இதனால் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
லேசான கொரோனா அறிகுறி வந்துள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், என்கிறார்.