என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, இரட்டை இலை சின்னம் அதிமுக.வுக்கு கிடைக்க உதவுவதாக கூறி, அதற்கு 50 கோடி கமிஷன் வேண்டும் என்று கேட்டவர் பண புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர். இதற்கு முன்பணமாக 1.3 கோடியை பெறும்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டார். 
இந்த வழக்கில் சிறையில் இருக்கும்போதே அரசு உயர் அதிகாரிகள் போல பேசி, பதவி உயர்வு, இடமாற்றம் பெற்று தருவதாக கூறி 200 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.  இது தொடர்பாக வழக்கு பதிந்த அமலாக்கத்துறையினர் சுகேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சுகேஷூக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, சென்னையில் உள்ள சுகேஷின் சொகுசு பங்களாவில் 16 சொகுசு கார்கள், முக்கிய ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டது. 
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது. அப்போது சுகேஷின் பண மோசடி தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஜாக்குலினுக்கும், சுகேசுக்கும் தனிப்பட்ட முறையில் பழக்கம் இருந்திருக்கிறது. ஜாக்குலின் மூலம் பல பண பரிமாற்றங்களை சுகேஷ் செய்திருக்கிறார் என்று அமலாக்கத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. ஜாக்குலின் தற்போது சல்மான்கானின் நெருங்கிய தோழியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
           
             
           
             
           
             
           
            