‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
"ஓம் சாந்தி ஓம், சாந்தினி சவுக் டூ சீனா, காக்டெயில் என, பாலிவுட் பியூட்டி, தீபிகாவின் திரையுலக வெற்றிப் பயணம் தொடர்கிறது. "சென்னை எக்ஸ்பிரஸ், ரேஸ்-3, கோச்சடையான் என, இப்போதும், காலில் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் தீபீகாவை நிறுத்தி,"கவர்ச்சியான வேடங்களிலேயே, அதிகம் நடிப்பதாக, உங்கள் மீது, குற்றச்சாட்டு உள்ளதே என, கேட்டால், தன் அழகான விழிகளை, அங்குமிங்கும் உருட்டி, முறைக்கிறார். "இப்படி வேறு, பீதியை கிளப்புகிறார்களா. ஏற்கனவே, எனக்கு சரியாக இந்தி பேசத் தெரியவில்லை என, புகார் கூறினர். நான், தென் மாநிலத்திலிருந்து வந்தவள். இந்தியில் சரளமாக பேசுவதற்கு, சிறிது காலம் பிடித்தது. இது ஒரு குற்றமா என, கேள்வி எழுப்பியவர், "கவர்ச்சியாக நடிப்பதாக என் மீது புகார் கூறுவோரிடம், ஒன்றை கூற விரும்புகிறேன். கவர்ச்சியாக நடிப்பது, அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. சீரியசான கேரக்டர்களில் கூட, கண்களில், கிளிசரினை தேய்த்துக் கொண்டு, மாய்ந்து, மாய்ந்து அழலாம். ஆனால், கவர்ச்சியாக நடிப்பது, ரொம்ப கஷ்டமான காரியம். அதையெல்லாம், அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என, பொருமித் தீர்த்தார்.