எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிறந்த சத்யஜித் ரே இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர். வங்கம், இந்தி, ஆங்கில மொழிகளில் இவர் இயக்கிய படங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன. இவர் இயக்கிய பதேர் பாஞ்சாலி இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 25க்கும் மேற்பட்ட முறை தேசிய விருது பெற்றவர், இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷண் விருது பெற்றவர்.
சத்யஜித் ரேவின் நூற்றாண்டு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. கொரோன தொற்று காலம் என்பதால் அது தொடர்பான விழாக்கள் நடக்கவில்லை. இந்த ஆண்டு மேமாத்துடன் நூற்றாண்டு நிறைவடைந்தது. கொரோன தொற்றின் 2வது அலை காரணமாக இப்போதும் எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை.
இதற்கிடையில் சத்யஜித்ரேவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சத்யஜித் ரேயின் 4 கதைகளை திரைப்படமாக்கி உள்ளது நெட்பிளிக்ஸ். அபிஷேக் சவுபே, ஸ்ரீஜித் முகர்ஜி மற்றும் வாசன் பாலா ஆகிய முன்னணி இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.