பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிறந்த சத்யஜித் ரே இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர். வங்கம், இந்தி, ஆங்கில மொழிகளில் இவர் இயக்கிய படங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன. இவர் இயக்கிய பதேர் பாஞ்சாலி இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 25க்கும் மேற்பட்ட முறை தேசிய விருது பெற்றவர், இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷண் விருது பெற்றவர்.
சத்யஜித் ரேவின் நூற்றாண்டு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. கொரோன தொற்று காலம் என்பதால் அது தொடர்பான விழாக்கள் நடக்கவில்லை. இந்த ஆண்டு மேமாத்துடன் நூற்றாண்டு நிறைவடைந்தது. கொரோன தொற்றின் 2வது அலை காரணமாக இப்போதும் எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை.
இதற்கிடையில் சத்யஜித்ரேவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சத்யஜித் ரேயின் 4 கதைகளை திரைப்படமாக்கி உள்ளது நெட்பிளிக்ஸ். அபிஷேக் சவுபே, ஸ்ரீஜித் முகர்ஜி மற்றும் வாசன் பாலா ஆகிய முன்னணி இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.




