கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிறந்த சத்யஜித் ரே இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர். வங்கம், இந்தி, ஆங்கில மொழிகளில் இவர் இயக்கிய படங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன. இவர் இயக்கிய பதேர் பாஞ்சாலி இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 25க்கும் மேற்பட்ட முறை தேசிய விருது பெற்றவர், இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷண் விருது பெற்றவர்.
சத்யஜித் ரேவின் நூற்றாண்டு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. கொரோன தொற்று காலம் என்பதால் அது தொடர்பான விழாக்கள் நடக்கவில்லை. இந்த ஆண்டு மேமாத்துடன் நூற்றாண்டு நிறைவடைந்தது. கொரோன தொற்றின் 2வது அலை காரணமாக இப்போதும் எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை.
இதற்கிடையில் சத்யஜித்ரேவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சத்யஜித் ரேயின் 4 கதைகளை திரைப்படமாக்கி உள்ளது நெட்பிளிக்ஸ். அபிஷேக் சவுபே, ஸ்ரீஜித் முகர்ஜி மற்றும் வாசன் பாலா ஆகிய முன்னணி இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.