ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் |
விஜய் நடித்த 'தெறி, மெர்சல், பிகில்' என மூன்று படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என இடம் பிடித்தவர் அட்லீ. இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது ஷாரூக்கான், அட்லீ இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை ரசித்தனர். அதன்பின் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். அப்போதே ஷாரூக்கான் நடிக்கப் போகும் ஹிந்திப் படத்தை அட்லீ இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வெளிவந்தன.
பின்னர் மும்பையில் ஷாரூக்கான் பிறந்தநாள் நிகழ்விலும் அட்லீ கலந்து கொண்டார். ஆனால், அவர்கள் இணையும் படம் பற்றி இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தற்போது அவர்கள் கூட்டணி பற்றி ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மாதமே ஷாரூக்கை சந்தித்து அட்லீ படத்தின் முழு கதையையும் சொல்லிவிட்டாராம். ஷாரூக்கிற்கும் கதை பிடித்துவிட்டதாம், இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லீயின் இரண்டு வருடக் காத்திருப்பு இந்த வருடக் கடைசியில் முடிவுக்கு வரும் என்கிறார்கள்.