சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், திஷா பதானி மற்றும் பலர் நடித்த 'ராதே' படம் ரம்ஜானை முன்னிட்டு டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளிவந்தது. படம் பற்றி மோசமான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது.
அப்படி ஒரு மோசமான விமர்சனத்தை பிரபல ஹிந்திப்பட விமர்சகரான கமால் கான் என்பவர் வெளியிட்டிருந்தார். ஹிந்தி நடிகர்கள், நடிகைகளை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர் என்று அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் தான் இந்த கமால் கான்.
'ராதே' விமர்சனத்திற்காக தற்போது அவர் மீது மும்பை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் சல்மான் கான். அது பற்றிய வக்கீல் நோட்டீசை வெளியிட்ட கமால் கான், “எனது பாலோயர்களுக்காக நான் விமர்சனம் செய்கிறேன். நான் படங்களுக்கு விமர்சனம் செய்வதை நிறுவத்துவதற்குப் பதிலாக நீங்கள் நல்ல படங்களை எடுக்கலாம் சல்மான் கான்,” என நேற்று டுவீட் செய்திருந்தார் கமால் கான்.
ஆனால், இன்று காலை வெளியிட்டுள்ள டுவீட்களில், “டியர் சலீம்கான் சாப், நான் சல்மான் கானின் படங்களையோ வாழ்க்கையையோ அழிக்க இங்கு இல்லை. நான் ஒரு கேளிக்கைக்காக விமர்சனம் செய்கிறேன். என் விமர்சனத்தால் சல்மான் பாதிக்கப்பட்டிருந்தால் இனி நான் விமர்சனம் செய்யவில்லை. அவர் தனது படத்தை விமர்சிக்க வேண்டாம் எனக் கேட்டிருந்தால் நான் விமர்சனம் செய்திருக்க மாட்டேன்.
அப்படி சொல்லியிருந்தால் அவர் படத்தை நான் விமர்சனம் செய்யாமலிருக்க இப்படி வழக்கு தொடர்ந்திருக்கத் தேவையில்லை. சலீம் சார், நான் யாரையும் புண்படுத்த இங்கில்லை. எதிர்காலத்தில் நான் அவர் படங்களை விமர்சனம் செய்யவில்லை. அதனால் வழக்கு தொடர்வதை நிறுத்தச் சொல்லுங்கள். நீங்கள் விரும்பினால் விமர்சன வீடியோவையும் நீக்கி விடுகிறேன்,” என சல்மான் கானின் அப்பா சலீம் கானுக்கு டுவீட் செய்து பதிவிட்டுள்ளார்.