ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், திஷா பதானி மற்றும் பலர் நடித்த 'ராதே' படம் ரம்ஜானை முன்னிட்டு டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளிவந்தது. படம் பற்றி மோசமான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது.
அப்படி ஒரு மோசமான விமர்சனத்தை பிரபல ஹிந்திப்பட விமர்சகரான கமால் கான் என்பவர் வெளியிட்டிருந்தார். ஹிந்தி நடிகர்கள், நடிகைகளை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர் என்று அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் தான் இந்த கமால் கான்.
'ராதே' விமர்சனத்திற்காக தற்போது அவர் மீது மும்பை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் சல்மான் கான். அது பற்றிய வக்கீல் நோட்டீசை வெளியிட்ட கமால் கான், “எனது பாலோயர்களுக்காக நான் விமர்சனம் செய்கிறேன். நான் படங்களுக்கு விமர்சனம் செய்வதை நிறுவத்துவதற்குப் பதிலாக நீங்கள் நல்ல படங்களை எடுக்கலாம் சல்மான் கான்,” என நேற்று டுவீட் செய்திருந்தார் கமால் கான்.
ஆனால், இன்று காலை வெளியிட்டுள்ள டுவீட்களில், “டியர் சலீம்கான் சாப், நான் சல்மான் கானின் படங்களையோ வாழ்க்கையையோ அழிக்க இங்கு இல்லை. நான் ஒரு கேளிக்கைக்காக விமர்சனம் செய்கிறேன். என் விமர்சனத்தால் சல்மான் பாதிக்கப்பட்டிருந்தால் இனி நான் விமர்சனம் செய்யவில்லை. அவர் தனது படத்தை விமர்சிக்க வேண்டாம் எனக் கேட்டிருந்தால் நான் விமர்சனம் செய்திருக்க மாட்டேன்.
அப்படி சொல்லியிருந்தால் அவர் படத்தை நான் விமர்சனம் செய்யாமலிருக்க இப்படி வழக்கு தொடர்ந்திருக்கத் தேவையில்லை. சலீம் சார், நான் யாரையும் புண்படுத்த இங்கில்லை. எதிர்காலத்தில் நான் அவர் படங்களை விமர்சனம் செய்யவில்லை. அதனால் வழக்கு தொடர்வதை நிறுத்தச் சொல்லுங்கள். நீங்கள் விரும்பினால் விமர்சன வீடியோவையும் நீக்கி விடுகிறேன்,” என சல்மான் கானின் அப்பா சலீம் கானுக்கு டுவீட் செய்து பதிவிட்டுள்ளார்.