7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி | முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் |
பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குர்களில் ஒருவர்தான் அனுராக் காஷ்யப். தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவரும் கூட.. தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் காலகட்டத்தில் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. ஆனால் அனுராக் காஷ்யப்புக்கு கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்கலுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்ட அனுராக் காஷ்யப் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டபோது, இதயத்திற்கு செல்லும் குழாய்களில் சில அடைப்புகள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செயப்பட்டு அந்த அடைப்புகள் நீக்கப்பட்டன. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.