அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குர்களில் ஒருவர்தான் அனுராக் காஷ்யப். தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவரும் கூட.. தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் காலகட்டத்தில் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. ஆனால் அனுராக் காஷ்யப்புக்கு கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்கலுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்ட அனுராக் காஷ்யப் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டபோது, இதயத்திற்கு செல்லும் குழாய்களில் சில அடைப்புகள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செயப்பட்டு அந்த அடைப்புகள் நீக்கப்பட்டன. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.