கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பொன்னியின் செல்வனில் நடித்தும் திரையில் தெரியவில்லை : விஜய் யேசுதாஸ் வருத்தம் | நண்பர்கள் ஆதரவில் நடைபெற்ற தசரா இயக்குனர் திருமணம் |
துபாய் அரசு பொதுவாக எந்த வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழங்காது, பணி நிமித்தமாக, சுற்றுலா, கல்வி நிமித்தமாக தங்கிக் கொள்ளலாம். இதற்கு தான் விசா வழங்கும். கடந்த 2019ம் ஆண்டு இந்த விசா கொள்கையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது.
அதன்படி கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தியது. இந்த விசா பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒருவரின் சிபாரிசு இன்றியே அந்நாட்டில் தங்கி, படித்தோ, வேலை செய்தோ வாழ முடியும். இந்த விசாக்கள் 5 முதல் 10 வருட காலத்துக்கு வழங்கப்படும். பின் சம்பந்தப்பட்டவர் மீது எதுவும் பிரச்சினை இல்லை என்றால் தானாக புதுப்பிக்கப்படும். சிறந்த திறமையாளர்களும், உயர்ந்த சிந்தனையாளர்களும் நாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த திட்டம் இப்போது அமுலுக்கு வந்துள்ளது. இந்தியாவை சேர்ந்தவர்களுக்கான கோல்டன் விசா வழங்குவதின் முன்னோடியாக பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு முதல் கோல்டன் விசாவை வழங்கி உள்ளது துபாய் அரசு. இதனை ஐக்கிய அரபு அமீரகத்தின் மேஜர் ஜெனரல் முகமது அல் மரியீன் வழங்கி உள்ளார். இதனை சஞ்ய்ததத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு துபாய் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.