விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

அக்ஷய்குமார், வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா நடித்துள்ள படம் பெல்பாட்டம். 1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் இது. ரஞ்சித் எம் திவாரி இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் கொரோனா காலத்துக்கு இடையில் ஒரே கட்டமாக லண்டனில் நடந்து முடிந்தது. படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளும் முடிந்த நிலையில் படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.
இந்த ஆண்டு இறுதிவரை தியேட்டர்கள் திறக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் உரிமையை கடும் போட்டிக்கு இடையே, அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும்.
இதற்கிடையில் தனது பட வெளியீடு தொடர்பாக அக்ஷய்குமார் விடுத்துள்ள அறிக்கையில், "பெல் பாட்டம் பட வெளியீடு குறித்து எனது ரசிகர்களின் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். அத்துடன் அவர்களின் அன்பிற்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வெளியீட்டுத் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருகிறார்கள். சரியான நேரத்தில் அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.