'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த வருடம் கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்தே, பலருக்கும் பலவிதமான உதவிகளை, தனது சொந்த செலவில் செய்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தமுறை மருத்துவ உதவிகள் பக்கம், தனது கவனத்தை திருப்பியுள்ளார். அதேசமயம் தற்போது தடுப்பூசிக்காக, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து பற்றி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார் சோனு சூட்
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு சிறிய கேள்விதான்.. ஒரு குறிப்பிட்ட மருந்து பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது தெரிந்தே, மருத்துவர்கள் நோயாளிகளிடம் அந்த மருந்தை வாங்கி வரும்படி பரிந்துரை செய்வது ஏன்..? மருத்துவர்களுக்கே அந்த மருந்து கிடைக்காதபோது, சாதாரண மக்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கும்..? எளிதில் கிடைக்காத ஒரே குறிப்பிட்ட மருந்தையே பரிந்துரை செய்வதற்கு பதிலாக மாற்று மருந்து ஏதேனும் இருந்தால், அந்த மருந்தை பயன்படுத்தி மக்களின் உயிரைக் காக்க உதவலாமே” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சோனு சூட்