படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
கடந்த வருடம் கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்தே, பலருக்கும் பலவிதமான உதவிகளை, தனது சொந்த செலவில் செய்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தமுறை மருத்துவ உதவிகள் பக்கம், தனது கவனத்தை திருப்பியுள்ளார். அதேசமயம் தற்போது தடுப்பூசிக்காக, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து பற்றி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார் சோனு சூட்
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு சிறிய கேள்விதான்.. ஒரு குறிப்பிட்ட மருந்து பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது தெரிந்தே, மருத்துவர்கள் நோயாளிகளிடம் அந்த மருந்தை வாங்கி வரும்படி பரிந்துரை செய்வது ஏன்..? மருத்துவர்களுக்கே அந்த மருந்து கிடைக்காதபோது, சாதாரண மக்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கும்..? எளிதில் கிடைக்காத ஒரே குறிப்பிட்ட மருந்தையே பரிந்துரை செய்வதற்கு பதிலாக மாற்று மருந்து ஏதேனும் இருந்தால், அந்த மருந்தை பயன்படுத்தி மக்களின் உயிரைக் காக்க உதவலாமே” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சோனு சூட்