ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கடந்த வருடம் கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்தே, பலருக்கும் பலவிதமான உதவிகளை, தனது சொந்த செலவில் செய்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தமுறை மருத்துவ உதவிகள் பக்கம், தனது கவனத்தை திருப்பியுள்ளார். அதேசமயம் தற்போது தடுப்பூசிக்காக, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து பற்றி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார் சோனு சூட்
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு சிறிய கேள்விதான்.. ஒரு குறிப்பிட்ட மருந்து பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது தெரிந்தே, மருத்துவர்கள் நோயாளிகளிடம் அந்த மருந்தை வாங்கி வரும்படி பரிந்துரை செய்வது ஏன்..? மருத்துவர்களுக்கே அந்த மருந்து கிடைக்காதபோது, சாதாரண மக்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கும்..? எளிதில் கிடைக்காத ஒரே குறிப்பிட்ட மருந்தையே பரிந்துரை செய்வதற்கு பதிலாக மாற்று மருந்து ஏதேனும் இருந்தால், அந்த மருந்தை பயன்படுத்தி மக்களின் உயிரைக் காக்க உதவலாமே” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சோனு சூட்