என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
அஜய் தேவ்கன் நடித்து வரும் படம் மைதான். அமித் சர்மா இயக்கும் இந்தப் படத்தை தற்போது அஜித் படத்தை தயாரித்து வரும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படம் படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டது. இதன் படப்பிடிப்புக்காக மும்பையில் பிரமாண்ட கால்பந்து மைதான செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. மாதக் கணக்கல் அந்த செட் பயன்படுத்தப்படாததால் வீணானது.
கொரோனா தொற்றின் முதல் அலை முடிந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. சில நாட்களே படப்பிடிப்பு நடந்த நிலையில் 2வது அலை காரணமாக படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. அதோடு சமீபத்தில் வீசிய டப் தேவ புயலால் அந்த செட் தரைமட்டமாகி விட்டது. இனி படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டுமானால் புதிய செட் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போனி கபூர் கூறியிருப்பதாவது: எனக்கு நடந்து கொண்டிருக்கிறது, மிகவும் கொடூரம். அதை நினைத்துப் பார்க்ககூட விரும்பவில்லை. மைதான் ஷெட்டை நினைத்துப் பார்க்கும் மனநிலையில்கூட நான் இல்லை. நஷ்டம் குறித்து நினைத்துப் பார்த்தால் நான் அழத் துவங்கிவிடுவேன். பட்ஜெட் அதிகமாவது, செலவுகள் கூடுவதை நினைத்தால் எனக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. உயிர்சேதம் எதுவும் இல்லை என்பதே மன ஆறுதல் தருகிறது. என்று கூறியிருக்கிறார்.