ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லி, அதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். அதன்பிறகு பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது புதிய படத்தை இயக்கப்போவதாக மும்பை சென்று அவரை சந்தித்து விட்டு திரும்பினார். ஆனபோதும் அந்த படம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால் விஜய் 66ஆவது படத்தை அட்லி இயக்கப் போவதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் ஷாரூக்கான் படத்தின் ப்ரீபுரொடக்சன்ஸ் வேலைகளில் அட்லி ஈடுபட்டு வருவதாகவும் இன்னொரு பக்கம் செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் அட்லியின் மனைவியான பிரியா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது உதவி இயக்குனர் குழுவுடன் கையில் ஹெலிகாப்டர், கார் பொம்மைகளை வைத்துக் கொண்டு கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அட்லி. இதை வைத்துப் பார்க்கையில் ஷாரூக்கானை வைத்து தான் இயக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் அட்லி இறங்கியிருப்பது தெரிகிறது.
அதேசமயம், ஏற்கனவே ஷாருக்கானிடம் அட்லி சொன்ன இரண்டு கதைகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் தற்போது மூன்றாவதாக ஒரு கதை அவர் ரெடி பண்ணி வருவதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.