400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் |
ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லி, அதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். அதன்பிறகு பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது புதிய படத்தை இயக்கப்போவதாக மும்பை சென்று அவரை சந்தித்து விட்டு திரும்பினார். ஆனபோதும் அந்த படம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால் விஜய் 66ஆவது படத்தை அட்லி இயக்கப் போவதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் ஷாரூக்கான் படத்தின் ப்ரீபுரொடக்சன்ஸ் வேலைகளில் அட்லி ஈடுபட்டு வருவதாகவும் இன்னொரு பக்கம் செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் அட்லியின் மனைவியான பிரியா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது உதவி இயக்குனர் குழுவுடன் கையில் ஹெலிகாப்டர், கார் பொம்மைகளை வைத்துக் கொண்டு கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அட்லி. இதை வைத்துப் பார்க்கையில் ஷாரூக்கானை வைத்து தான் இயக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் அட்லி இறங்கியிருப்பது தெரிகிறது.
அதேசமயம், ஏற்கனவே ஷாருக்கானிடம் அட்லி சொன்ன இரண்டு கதைகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் தற்போது மூன்றாவதாக ஒரு கதை அவர் ரெடி பண்ணி வருவதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.