‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாவுக்கு, கடந்தாண்டு நவம்பரில் பெண் குழந்தை பிறந்தது. ஆரத்யா என்ற அந்த குழந்தையை புகைப்படம் எடுப்பதற்காக, கடந்த ஓராண்டாகவே மீடியாக்காரர்கள் பெரும் முயற்சி செய்தனர். வெளிநாடு சென்று விட்டு, ஐஸ்வர்யா, மும்பை திரும்பும்போதெல்லாம், கேமரா மேன்கள், விமான நிலையத்தில் தவம் கிடந்தனர். ஐஸ்வர்யாவோ, தன் குழந்தையை யாரும் புகைப்படம் எடுத்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். ஒரு வழியாக, மீடியாக்காரர்களின் நீண்ட நாள் தவம், கடந்த வாரம் பலித்தது. மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், உலக சினிமாவுக்கு ஐஸ்வர்யா ஆற்றிய சேவையை பாராட்டி, பிரான்சு அரசாங்கம் சார்பில், விருது வழங்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக, தன் குழந்தையுடன் வந்திருந்தார், ஐஸ்வர்யா. வழக்கம்போல் கெடுபிடி இருக்கும் என, மீடியாக்காரர்கள் நினைக்க, ஐஸ்வர்யாவோ, தாராளமாக நடந்து கொண்டார். அப்புறம் என்ன... கேமராக்காரர்கள், ஆரத்யாவை, "பிளாஷ் மழையில் நனைய வைத்தனர். கேமரா வெளிச்சத்தை பார்த்து மிரண்டு, ஒரே அழுகையாக அழுத, தன் குழந்தையை தேற்றுவதற்குள், ஐஸ்வர்யா, திணறிப் போனார்.