‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இன்றைய தேதியில், பாலிவுட்டின் "மோஸ்ட் வாண்டட் நடிகையாக இருப்பவர், பிரியங்கா சோப்ரா தான். வெள்ளித் திரைக்கு, இவர் முதலில் அறிமுகமான படம் விஜய் நடித்த, "தமிழன். அதற்கு பின், பாலிவுட்டில் பிசியாகி விட்டார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், அவருக்கு அழைப்பு விடுத்தாலும், "சாரி, இந்தியில் டைட் ஷெட்யூல் இருக்கிறது என்ற பதில் மட்டுமே, பிரியங்காவிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. ஆனால், சமீபத்தில் பிரியங்காவின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென் மாநில மொழி திரைப்படங்களை நோக்கி, பார்வையை திருப்பியுள்ளார்.
அமிதாப் நடித்து, இந்தியில் பெரும் வெற்றி பெற்ற, "ஜாஞ்சிர் என்ற படம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் "ரீ-மேக் ஆகிறது. இரண்டு மொழிகளிலுமே, ஹீரோயின் பிரியங்கா தான். தெலுங்கில், இவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளவர், ராம் சரண் தேஜா. "தெலுங்கில் அறிமுகமாவதை நினைத்தாலே, நெஞ்சு பட படவென அடித்துக் கொள்கிறது. இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற, தென் மாநில படங்களில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பேன் என்கிறார், பிரியங்கா.