போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட்டின் சூப்பர் நடிகர் அமிதாப், நேரந் தவறாமையை கடைப்பிடிப்பதில், மிகவும் கெட்டிக்காரர். படப்பிடிப்புகளுக்கு, குறித்த நேரத்துக்கு முன்பே ஆஜராகி விடுவார். "கோன் பனேகா குரோர்பதிஎன்ற "டிவி நிகழ்ச்சியின், அடுத்த கட்ட படப்பிடிப்பு, மும்பையில் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், காலை 11 மணிக்கு, அமிதாப், படப்பிடிப்புக்கு வருவதாக இருந்தது. ஆனால், 12.30க்கு தான், வேர்க்க, விறு விறுக்க "செட்டுக்கு வந்தார். வந்த மறு நிமிடமே, அங்கிருந்த அனைவரிடமும், தாமதத்துக்காக மன்னிப்பு கேட்ட அவர், "குறித்த நேரத்தில் புறப்பட்டாலும், போக்குவரத்து நெருக்கடி காரணமாக, தாமதமாகி விட்டதுஎன்றும், விளக்கம் அளித்தார். இதைக்கேட்ட படப்பிடிப்பு குழுவினர்,"ஒரு படத்தில் தலையை காட்டியதுமே, படுபயங்கரமாக "பில்டப் கொடுக்கும் நடிகர்களுக்கு மத்தியில், ஒரு மிகப் பெரிய நடிகர், ஒரு மணி நேர தாமதத்துக்கு, நம்மிடம் மன்னிப்பு கேட்கிறாரே,என, ஆச்சர்யப்பட்டனர்.