‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டை பொறுத்தவரை பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வருபவர் என்னவோ ஷாருக்கான் தான். திருமணமாகாத சல்மான்கானை விட திருமண வயதில் மகள் இருக்கும் ஷாருக்கான் மீதான ஈர்ப்பு இன்னும் பல பெண்களுக்கு குறையவே இல்லை.
சமீபத்தில் மும்பையில் புதிதாக திருமணம் செய்த பெண் ஒருவர், ஷாருக்கானின் தீவிர ரசிகை.. அதனால் தனது திருமணம் முடிந்த கையோடு தனது கணவரை அழைத்து வந்து ஷாருக்கான் வீட்டின் முன்னாள் நின்று விதவிதமான போஸ்களில் படம் எடுத்துக் கொண்டார்.
பொதுவாக திருமணம் முடிந்ததும் மணமக்கள் கோவில்களுக்கு செல்வார்கள் இல்லையா, அதைத்தான் நாங்களும் செய்துள்ளோம் என அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்கள் இந்த ஜோடியினர். இந்த புகைப்படங்களை டுவிட்டரில் பார்த்த ஷாருக்கான், தனது வாழ்த்துக்களை மணமக்களுக்கு கூறி சந்தோஷப்படு உள்ளார். சோஷியல் மீடியாவில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.