இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
சண்டிகர், : கடந்த, 2015ல், தேரா சச்சா சவுதா அமைப்பு தலைவன், குர்மீத் ராம் ரஹிம் சிங் நடித்த, எம்.எஸ்.ஜி., திரைப்படம் வெளியீடு தொடர்பான வழக்கில், பிரபல பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், பஞ்சாப் மாநில போலீசின், சிறப்பு விசாரணைக்குழு முன், நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பாலியல் பலாத்கார வழக்கில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பஞ்சாபை சேர்ந்த, தேரா சச்சா சவுதா அமைப்பு தலைவன், குர்மீத் ராம் ரஹீம் சிங், 2015ல், எம்.எஸ்.ஜி., என்ற படத்தில் நடித்தார். .அந்த படத்தை வெளியிடுவதில் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, அப்போதைய பஞ்சாப் மாநில துணை முதல்வரும், அகாலி தளம் தலைவருமான, சுக்பீர் சிங் பாதலுடன், குர்மீத் ராம் ரஹீமை, மும்பையில் உள்ள தன் வீட்டில் சந்திக்க, பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் ஏற்பாடு செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கை, பஞ்சாப் மாநில போலீசை சேர்ந்த, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, சண்டிகர் நகரில் உள்ள, பஞ்சாப் போலீஸ் தலைமையக வளாகத்தில் உள்ள, எஸ்.ஐ.டி., அலுவலகத்துக்கு சென்று, அக் ஷய் குமார் நேரில் விளக்கம் அளித்தார். அப்போது, தன் மீதான புகாரை, அவர் திட்டவட்டமாக மறுத்ததாக கூறப்படுகிறது.