ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மும்பை : மீ டூ புகாரில் சிக்கிய, பிரபல பாலிவுட் நடிகர் அலோக் நாத், 62, மீது, மஹாராஷ்டிர மாநில போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். பிரபல பாலிவுட் நடிகர், அலோக் நாத் மீது, சமூக வலைதளமான, பேஸ்புக்கில், மீ டூ ஹேஷ்டேக்கில், எழுத்தாளரும், தயாரிப்பாளருமான, வின்டா நந்தா, பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறினார்.
அதில், சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, எனக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து, அலோக் நாத் பாலியல் பலாத்காரம் செய்தார் என, அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலோக் நாத்தின் மனைவி, அஷு சிங், வின்டா நந்தா மீது, போலீசில் புகார் அளித்தார்.
நடிகர், அலோக் நாத் மீது, மேலும் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறினர். இதன்பின், சின்டா எனப்படும், சினிமா மற்றும், டிவி நடிகர்கள் சங்கம், அலோக் நாத்தை, சங்கத்தில் இருந்து நீக்கியது. இந்நிலையில் நேற்று, வின்டா நந்தா அளித்த புகாரின்படி, அலோக் நாத் மீது, மும்பை போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர்.