ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தன்னை வைத்து ஏற்கனவே படம் இயக்கிய இயக்குனர்களுக்கு மீண்டும் அவ்வப்போது வாய்ப்பு கொடுத்து வருகிறார் மம்முட்டி. அப்படிப்பட்ட ஒருவர் தான் இயக்குனர் ஜானி ஆண்டனி. சசிகுமாரை தான் இயக்கிய 'மாஸ்டர்ஸ்' படம் மூலம் மலையாளத்தில் நடிக்க வைத்தவர். இவரது இயக்கத்தில் ஏற்கனவே 'துருப்பு குலான்', 'பட்டணத்தில் பூதம், தப்பன்னா, தோப்பில் ஜோப்பன் என நான்கு படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி.
இதையடுத்து சமீபத்தில் மம்முட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் ஜானி ஆண்டனி. அப்போது அவரிடம் தங்கள் கூட்டணியில் வெளியான 'பட்டணத்தில் பூதம்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் நன்றாக இருக்கும்.. எடுக்க முடியுமா என கேட்டுள்ளார். ஜானி ஆண்டனியும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு இரண்டாம் பாகத்திற்கான வேளையில் இறங்கியுள்ளார்.
2009ல் வெளியான பட்டணத்தில் பூதம் படம் குழந்தைகளை கவரும் விதமாக மந்திர தந்திர மாயாஜாலம் நிறைந்த படமாக வெளியானது. இதில் மம்முட்டி சர்க்கஸ் கலைஞர், பூதம் என இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார்.