‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தியா முழுவதும் 'மீ டூ' விவகாரம் பெரும் அளவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. திரையுலகத்தில் தான் பலரும் அவர்களது பாலியல் தொந்தரவுகளைப் பற்றி அதிகமாகப் பேசி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல நடிகைகள் அவர்களுக்கு நடந்த விஷயங்களைப் பற்றி பரபரப்பாகப் பேசி வருகிறார்கள்.
இந்த மீ டூ விவகாரம் குறித்து பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்கள் வாயைத் திறக்காமல் அமைதி காப்பது ஏன் என நடிகை கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஷபனா ஆஸ்மி, கரன் ஜோஹர் போன்றவர்கள் எங்கே போனார்கள். அவர்களும் இது பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். 'ஜிம் தோற்றம், ஏர்போர்ட் தோற்றம்' என பத்து முறை டுவீட் போடுவார் கரண். ஆனால், இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இது அவர்களுக்கு 'பிரட் அன்ட் பட்டர்' மாதிரி. திரையுலகம் ஒரு முக்கியமான மாற்றத்தை நோக்கி நகரும் போது அவர்கள் எங்கே?. பெரிய நட்சத்திரங்கள் ஏன் அவர்களின் விவரங்களை இதுவரை ஷேர் செய்யவில்லை. நான் மட்டுமே அது பற்றி பேசியிருக்கிறேன். ஆனால் அது மட்டும் போதாது,” என்று கங்கனா கூறுகிறார்.