போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் 24 வயது மகள் சாரா அலிகானும் கதாநாயகியாக கோதாவில் குதித்துள்ளார். தற்போது அபிஷேக் கபூர் என்பவர் இயக்கிவரும் 'கேதார்நாத்' படம் மூலம் அறிமுகமாகி நடித்துவரும் சாரா, முதல் படத்திலேயே கால்ஷீட் குளறுபடி செய்து அதன் மூலம் சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறார்.
'கேதார்நாத்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் ரோஹித் ஷெட்டி டைரக்சனில் 'சிம்பா' என்கிற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சாரா அலி கான்.. அதேசமயம் கேதார்நாத் படத்திற்காக கொடுத்த தேதிகளை 'சிம்பா'வுக்கும் கொடுத்துள்ளாராம் சாரா.. இதனால் ஜூன் மாதம் கேதார்நாத் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
இதை தொடர்ந்து 'கேதர்நாத்' பட இயக்குனர் ஹிதேஷ் ஜெயின், முதலில் சாரா 'கேதார்நாத்' படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதோடு தவறினால் 5 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.