மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
ஒரு படத்தின் சில காட்சிகளில் தவறு நடந்துவிட்டால் அதை மீண்டும் படமாக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அப்படியிருக்க ஒரு படத்தையே சரியில்லை, மொத்தமாக மீண்டும் எடுங்கள் என்று சொன்னால் எப்படியிருக்கும். அப்படி ஒரு சம்பவம் தமன்னா நடித்துள்ள ஹிந்தி படத்திற்கு நடந்திருக்கிறது.
இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கும் படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை ஹிந்தியில் தமன்னா நாயகியாக நடிக்க உருவாக்கினார்கள். இரண்டு படங்களையும் யுவனுடன் சேர்ந்து தயாரிக்கும் ஹிந்தித் தயாரிப்பாளரான வஷு பங்கானி, ஹிந்திப் படத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் கூட சரியில்லை, மீண்டும் மொத்தமாக எடுங்கள் என்று சொல்லிவிட்டாராம். தயாரிப்பாளரின் முடிவைக் கேட்டு தமன்னா ஷாக் ஆகிவிட்டாராம்.
ஹிந்தியில் ரீஷுட் எடுக்கச் சொன்னார்கள் சரி, ஆனால், படத்தை தமிழில் எடுத்து முடித்துவிட்டார்களா இல்லை என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. எடுக்காமலே இருந்திருந்தால் நல்லதுதான் இல்லை என்றால் மீண்டும் ரீஷுட் செய்யச் சொல்லியிருப்பாரே தயாரிப்பாளர் வஷு.