‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.
2018ம் ஆண்டுக்கான மிகுந்த செல்வாக்கு பெற்ற 100 பேர் பட்டியலில் இந்தியர்களான விராட் கோலி, தீபிகா படுகோனே, ஓலா இணை-நிறுவனர் பவிஷ் அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
தீபிகா படுகோனே இந்திப் படங்களிலிருந்து ஹாலிவுட் படங்கள் வரை சென்றுவிட்டார். அவரைப் பற்றிய தகவலை அவருடன் நடித்த ஹாலிவுட் நடிகரான வின் டீசல் தான் எழுதியிருக்கிறார். “தீபிகா இந்தியாவிற்கு மட்டும் பிரதிநிதியாக இல்லை, இந்த உலகத்தின் பிரதிநிதியாக இருக்கிறார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தீபிகா நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'பத்மாவத்' படம் பெரிய வெற்றியைப் பெற்றது.