ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான் கான், 52. ராஜஸ்தான் மாநிலத்தில் 1998ல், இரண்டு அரிய வகை மான்களை சுட்டுக் கொன்ற வழக்கில், ஜோத்பூர் நீதிமன்றம், நேற்று முன்தினம், அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஜோத்பூர் சிறையில், சல்மான் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, சல்மான் கான் தாக்கல் செய்த மனு, மாஜிஸ்திரேட், ரவீந்திர குமார் ஜோஷி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஜாமின் மனு மீதான தீர்ப்பை, இன்று வழங்குவதாக, மாஜிஸ்திரேட் அறிவித்தார்.
இரண்டு நாட்கள் சிறை வாசம் அனுபவதித்த சல்மான் கானுக்கு, ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ரூ.50 ஆயிரம் பிணைய பத்திரத்துடன் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி பிறப்பி்த்த உத்தரவில் 87 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் சல்மான் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷியும் ஒருவர்.