இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
நாட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படும் வைர வியாபாரி நிரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அவரை போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிரவ் மோடியின் வைர நகை கடை விளம்பரத்தில் நடித்ததற்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டார் என்று அவர் மீது நடிகை பிரியங்கா சோப்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா, நிரவ் மோடி டைமண்ட் ஜூவல்லரியின் விளம்பர மாடலாக இருந்தார். இதற்காக அவருக்கு கோடி கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளது. நிரவ் மோடி மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, அவரை சி.பி.ஐ தேடிவரும் நிலையில் அவர் மீது பிரியங்கா சோப்ரா புகார் கூறியிருப்பதும், வழக்கு தொடர்ந்திருப்பதும் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.