மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
2015 ம் ஆண்டு வெளியான ஹீரோ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சூரஜ் பன்சோலி. அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த சூரஜ், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்காக டான்ஸ் அகாடமி ஒன்றை துவக்க திட்டமிட்டுள்ளாராம். சூரஜ் தனது டான்ஸ் அகாடமியை வரும் மார்ச் மாதம் மும்பையில் திறக்க உள்ளாராம். மும்பையை தொடர்ந்து டில்லியிலும் இதே போன்றதொரு டான்ஸ் அகாடமியை துவக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.
இந்த தகவலை உறுதி செய்துள்ள சூரஜ், டான்ஸ் அகாடமி துவங்க உள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. டான்ஸ் என்பது ஒரு கலை மட்டுமல்ல அது உணர்வுகளின் வெளிப்பாடு. இளைஞர்களிடம் அனைத்து திறமைகளும் உள்ளன. ஆனால் அவர்களை முழுமையாக உருவாக்குவதற்கான சரியாக வழிகாட்டுதல் இல்லாமல் உள்ளனர். அத்தகையவர்களை ஊக்குவித்து, வெளிக் கொண்டு வர வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன் என்றார்.