போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, சாகித் கபூர் மற்றும் அதிதி ராவ் முதன்மை ரோலில் நடிக்க உருவாகி உள்ள படம் பத்மாவதி. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இரண்டு மாதங்களாகிவிட்டது. கடந்த டிசம்பர் மாதமே படம் ரிலீஸாக வேண்டியது.
ஆனால் படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளாக கூறி ராஜபுத்ர அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜஸ்தான், உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் தடை விதித்தன. அதோடு படத்திற்கு சென்சார் பெறுவதிலும் சிக்கல் நீடித்தது. இதனால் படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பத்மாவதி படத்தை ரிலீஸ் செய்ய தற்போது சென்சார் போர்டு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது. ஆனால் அதற்கு முக்கியமான மூன்று நிபந்தனைகள் விதித்துள்ளது சென்சார் போர்டு.
அதாவது, படத்தில் சர்ச்சைக்குரிய 26 காட்சிகளை நீக்க வேண்டும், பத்மாவதி என்ற பெயருடன் ரிலீஸாகமால் பத்மாவத் என்ற பெயரில் ரிலீஸ் செய்யலாம் மற்றும் படத்தில் மூன்று முறை ஒரு விளக்க அறிக்கை வெளியிட வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு படக்குழு ஓகே., சொன்னால் யு/ஏ சான்று வழங்குவதாக சென்சார் போர்டு பரிந்துரை செய்துள்ளது.
சென்சார் போர்ட்டின் இந்த நிபந்தனைக்கு படக்குழு ஓகே சொல்லும் பட்சத்தில் படம் சென்சாராகி, அடுத்தமாதம் 18-ம் தேதி பத்மாவதி ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.